தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசு தொடங்கியுள்ள புதிய திட்டம் – வரவேற்கும் பெற்றோர்கள்!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசு தொடங்கியுள்ள புதிய திட்டம் - வரவேற்கும் பெற்றோர்கள்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசு தொடங்கியுள்ள புதிய திட்டம் - வரவேற்கும் பெற்றோர்கள்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக அரசு தொடங்கியுள்ள புதிய திட்டம் – வரவேற்கும் பெற்றோர்கள்!

தமிழக பள்ளி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் எண்ணற்ற திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது மாணவர்களை நல்வழிப்படுத்தும் திட்டம் ஒன்று தொடங்கப்பட உள்ளது.

சிற்பி திட்டம்:

தமிழக மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்யும் பொருட்டு இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் தன்னார்வலர்களை கொண்டு மாலை நேரங்களில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தொடக்க கல்வி மாணவர்களுக்கு அடிப்படை எழுத்து மற்றும் கணித அறிவினை அளிக்கும் பொருட்டு எண்ணும், எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 1 – 3 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எழுத்து மற்றும் எண்கள் கற்பிப்பதை அரசு நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்பிக்கும் வகையிலும், திறமைகளை மேம்படுத்தும் வகையிலும் பாட வகுப்புகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த வாரம் முதல்வர் ‘டெல்லி மாடல் பள்ளி’ எனும் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார் இந்த நிலையில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்த ‘சிற்பி’ எனும் திட்டம் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்தை செப்டம்பர் 14ம் தேதி அன்று காலை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்வில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைக்கவுள்ளார்.

இந்திய மாநிலங்களுக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

Exams Daily Mobile App Download

இந்த சிற்பி திட்டமானது காவல்துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் சென்னை பெருநகர காவல் மூலமாக திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த ஒருங்கிணைப்பு அதிகாரிகளும் நியமிக்கப்படவுள்ளனர். மேலும் ‘சிற்பி’ திட்டத்தில் இணையும் மாணவர்களுக்கு சீருடைகளும் வழங்கப்படவுள்ளது. தற்போது தமிழக பள்ளிகளில் இருக்கும் தேசிய மாணவர் படை திட்டம் போல இத்திட்டமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மாணவர்களை சமூக பொறுப்புள்ளவர்களாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சிற்பி திட்டம் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பையும் பெற்றுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!