இந்திய மாநிலங்களுக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

0
இந்திய மாநிலங்களுக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
இந்திய மாநிலங்களுக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
இந்திய மாநிலங்களுக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் கனமழை பெய்யும் என்றும், செப்டம்பர் 14 முதல் 16 வரை உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு எச்சரிக்கை:

நாடு முழுவதிலுமே கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு அதிக அளவில் இருந்து வருகிறது.சில இடங்களில் மிதமான அளவில் இருப்பினும், பல மாநிலங்களில் கடுமையான விளைவை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அனைத்து மாநில வாரியாக வானிலை நிலவரத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த 48 மணி நேரத்திற்கு மகாராஷ்டிராவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர், சம்பாவத், பாகேஷ்வர் மற்றும் நைனிடால் ஆகிய பகுதிகளுக்கு டேராடூன் பிராந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செப்டம்பர் 14 முதல் 16 வரை உத்தரகாண்டின் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகள் மற்றும் ஓடைகள் அருகே தங்கியிருக்கும் மக்களை வானிலை ஆய்வாளர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். அடுத்த 5 நாட்களுக்கு தெற்கு குஜராத், வடக்கு மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில், திங்கள் மற்றும் செவ்வாய் இடையே இடைப்பட்ட இரவில் நகரின் சில பகுதிகளில் மழை பெய்தது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Exams Daily Mobile App Download

கொல்கத்தா, ஹவுரா, ஹூக்ளி, மேற்கு மிட்னாபூர், பிர்பூம் மற்றும் முர்ஷிதாபாத் ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை காலை வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கிழக்கு மிட்னாபூர், வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் நதியா ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை வரை மிகக் கனமழை பெய்யும் என்றும் அதன்பின் புதன்கிழமை காலை வரை பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது. பலங்கிர், கலஹண்டி, சோனேபூர், ஜார்சுகுடா, சுந்தர்கர், சம்பல்பூர், பர்கர், தியோகர், நுவாபாடா மற்றும் கியோஞ்சார் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை வரை கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் ராஜஸ்தானின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலையைத் தொடர்ந்து கடந்த 24 மணிநேரமாக இடைவிடாத மழையால் ஜார்க்கண்ட் பாதிக்கப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!