காரணமின்றி விடுப்பு எடுத்த அரசு கல்லூரி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை – கல்லூரி கல்வி இயக்குனர் அறிக்கை!!!

0
காரணமின்றி விடுப்பு எடுத்த அரசு கல்லூரி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை
காரணமின்றி விடுப்பு எடுத்த அரசு கல்லூரி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை
காரணமின்றி விடுப்பு எடுத்த அரசு கல்லூரி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை – கல்லூரி கல்வி இயக்குனர் அறிக்கை!!!

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியைகள் மருத்துவ விடுமுறை தவிர தேவையற்ற விடுமுறைகள் எடுத்தவர்களின் பட்டியலை தயார் செய்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கல்லூரி கல்வி இயக்குனர் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார்.

கல்லூரி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை:

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு 9மாதங்கள் முடிவடைந்துள்ளன. ஆசிரியர்கள் தங்களது வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்திவருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்கள் மருத்துவ காரணம் தவிர்த்து காரணமின்றி விடுப்பு எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கல்லூரியில் கற்பித்தல் மற்றும் நிர்வாக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு கல்லூரி கல்வி இயக்குனர் ராமலட்சுமி அனைத்து கல்லுரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்,” தேவையற்ற காரணங்களுக்காக அரசு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்கள் விடுமுறை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு வகுப்புகள் தடைபடும். இதனால் கற்பித்தல் மற்றும் கல்லூரி நிர்வாக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவ காரணங்கள் தவிர மற்ற காரணங்களுக்காக அதிகம் விடுப்பு எடுக்கும் பேராசியர்களின் பட்டியலை தயார் செய்து கல்லூரி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்”, இவ்வாறு அதில் குறிப்பிட்டு அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ஜே.இ.இ தேர்வுகளுக்கான பயிற்சி தொடக்கம்- மத்திய கல்வித்துறை அறிவிப்பு!!

இதன்படி அரசு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியைகள் மற்றும் கல்லூரி பணியாளர்கள் பட்டியல் சேகரித்தபின் அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் உரிய விளக்கம் அளிக்காதவர்கள் மீது அரசு சார்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி கல்வி வட்டாரங்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டியல் தயாரிப்பிற்கான பணிகளை கல்லூரி முதல்வர்கள் தொடங்கிவிட்டதால் அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேவையற்ற விடுமுறை எடுத்துள்ள நாட்களுக்கான ஊதியத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்புள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்கக வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!