ஐடி நிறுவனங்கள் இயங்க அரசு அளித்த அனுமதியை திரும்ப பெற வேண்டும் – பணியாளர்கள் கோரிக்கை.!
தகவல் தொழில் நுட்ப நிறுவங்கள் ஏப்ரல் 20 இல் செயல்படலாம் என அரசு அனுமதி அளித்திருந்தது. அந்த அனுமதியை திரும்ப பெற வேண்டும் என தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் அமைப்பு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் அமைப்பு
ஏப்ரல் 14 உடன் முடிவடைவதாக இருந்த ஊரடங்கு கொரோனா பாதிப்பால் தற்போது மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் இதில் ஏப்ரல் 20 க்கு மேல் அரசு சில தளர்வுகளை செய்யப்போவதாக கூறியிருந்தது. அதில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு செயல்படலாம் என அரசு அளித்த அனுமதியை திரும்ப பெற தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் அமைப்பு தலைவர் பரிமளா அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்
கோரிக்கை
அந்த கோரிக்கையில் கூறியிருந்ததாவது, “நாடு முழுவதும், மே, 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும், 20 முதல், ஐ.டி., என்ற, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட, மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.
ஜூன் நான்காவது வாரத்தில்தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு
ஆனால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பணியாளர்கள் அனைவருக்கும், வாகன வசதி செய்து கொடுக்கவில்லை. பணியாளர்களில், 80 சதவீதம் பேர், பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்சி போன்றவற்றில் தான் வந்து செல்கின்றனர். ஆனால், வாகனங்கள் இயங்காத நிலையில், பணிக்கு செல்வது சிரமமாக இருக்கும். மேலும், அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளன. இது, கொரோனா நோய் பரவலுக்கு, வாய்ப்பாக அமையும்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பழைய பாடத்திட்டம் தொடருமா…??
தற்போது, ஊரடங்கு காரணமாக, பணியாளர்கள் வீட்டிலிருந்தபடி பணிபுரிகின்றனர். எனவே, 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியை, அரசு திரும்ப பெற வேண்டும். தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும், மாத ஊதியம் வழங்குவதை, அரசு உறுதிப்படுத்த வேண்டும்; ஆட்குறைப்பை கைவிட, உத்தரவிட வேண்டும்.” என்று கூறப்பட்டிருந்தது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |