நீ என்ன என் பொண்ணா? இனியாவை கேள்வி கேட்ட கோபி.. அதிர்ச்சியில் உறைந்த மொத்த குடும்பம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராமமூர்த்தி முயற்சி செய்தும் கோபி ராதிகா திருமணத்தை நிறுத்த முடியவில்லை. இந்நிலையில் திருமணத்தை நிறுத்த இனியா வர, கோவத்தில் கோபி இனியாவை பொண்ணே இல்லை என சொல்கிறார். இதெல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலின் கதைக்களம் பல ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கோபி ராதிகா திருமணம் பல சிக்கல்களுக்கு நடுவே நடைபெறுமா என்ற எதிர்பார்ப்புடன் தினசரி எபிசோடுகள் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோபி திருமணத்தை நிறுத்த ராமமூர்த்தி கிளம்பி வருகிறார். கோபியிடம் பேரன் எடுக்கும் வயதில் திருமணம் செய்ய அசிங்கமாக இல்லையா என கேட்க, இல்லை என கோபி சொல்கிறார். யார் தடுத்தாலும் திருமணத்தை நிறுத்த முடியாது என கோபி சொல்கிறார்.
ராமமூர்த்தியை கோபி அசிங்கப்படுத்த அதை பார்க்க முடியாத பாக்கியா ராமமூர்த்தியை அழைத்து செல்கிறார். இந்நிலையில் அடுத்து வர போகும் எபிசோடில் ராமமூர்த்தியை தேடி ஈஸ்வரி, இனியா உடன் வருகிறார். இனியாவை பார்த்தால் கோபி மனம் மாறும் என அனைவரும் நினைக்கிறார்கள். இனியாவும் என்ன டாடி இதெல்லாம் என கேட்க, ஆனால் கோபி அப்போதும் மனம் மாறாமல் இருக்கிறார். இனியாவை பார்த்தும் தன்னுடைய முடிவை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.
சத்தமே இல்லாமல் சாதனை படைத்த சன் டிவியின் பிரபல சீரியல்- வைரலாகும் போட்டோ! ரசிகர்கள் வாழ்த்து!
Exams Daily Mobile App Download
உடனே இனியா டாடி எனக்காக திருமணம் செய்து கொள்ளாதீங்க என சொல்ல, ஆனால் கோபி நீ எனக்கு பொண்ணே இல்லை, எனக்கு என் சந்தோசம் தான் முக்கியம் என சொல்கிறார். அதை கேட்டு இனியா மனம் மிகவும் வருத்தப்படுகிறது. இத்தனை நாள் நீ தான் என் உயிர் என சொன்ன கோபி இப்போது ராதிகாவிற்காக இனியாவை பெண்ணே இல்லை என சொல்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இனியா மன வருத்தத்துடன் கிளம்பி செல்ல, கோபி ராதிகா கழுத்தில் தாலி கட்ட தயாராகுகிறார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்