சத்தமே இல்லாமல் சாதனை படைத்த சன் டிவியின் பிரபல சீரியல்- வைரலாகும் போட்டோ! ரசிகர்கள் வாழ்த்து!
சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் சீரியல் தான் ‘எதிர்நீச்சல்”. இந்த சீரியல் 200 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், அதனை சீரியல் குழுவினர் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எதிர்நீச்சல் சீரியல்:
தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனல்களில் ஒன்றான சன் டிவியில் பல வித்தியாசமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக பெண்களை மையமாக வைத்த கதையுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது சன் டிவியில் கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இயக்கி வரும் எதிர்நீச்சல் சீரியல் திருமணத்திற்கு பின் பெண்கள் எந்த அளவிற்கு தைரியத்துடன் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த சீரியலில், அண்ணன் தம்பிகள், தங்களது மனைவிகளை அடிமையாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கின்றனர். தங்களது குடும்பத்தில் இருக்கும் பெண்கள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் அதை மறைத்து வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். முதல் மூன்று மருமகள்களும் அதற்கு ஏற்றார் போல நடந்து கொள்கின்றனர். ஆனால் கடைசி மருமகள் ஜனனி இந்த விதிமுறைகளை மாற்ற போவதே கதையாக இருக்கிறது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ராமமூர்த்தி – கோபியால் வந்த வினை!
இந்நிலையில் இந்த சீரியல் தொடங்கப்பட்டு சில மாதங்கள் ஆன நிலையில் TRPயில் நல்ல ரேட்டிங்கை பிடித்துள்ளது. அது மட்டுமில்லாமல் 200 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக எதிர்நீச்சல் சீரியல் இருக்கிறது. அந்த வகையில் சீரியல் குழுவினர் 200 எபிசோடு கடந்ததை கொண்டாடி இருக்கின்றனர். அது குறித்த புகைப்படங்களை சீரியல் நடிகர் நடிகைகள் அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றனர். ஏகப்பட்ட ரசிகர்கள் சீரியல் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.