உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ராமமூர்த்தி – கோபியால் வந்த வினை!
விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பலரும் எதிர்பார்க்காத அதிரடி தருணங்கள் நிகழ்ந்து வருகிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி தொடரில், ராமமூர்த்தி எவ்வளவு சொல்லியும் கோபி திருமணத்தை நிறுத்துவதற்கு தயாராக இல்லை. இது போக சந்துரு மற்றும் ராதிகாவின் அம்மா வேறு கோபியை ஏற்றி விடுகின்றனர். ராதிகா ஒருபுறம் எங்கு கோபி குடும்பத்தால் இந்த கல்யாணம் நின்று விடுமோ என பதற்றத்தில் உள்ளார். மண்டபத்தில் நடந்த பிரச்சனைக்கு பிறகு பாக்கியா ராமமூர்த்தியை தனியாக அழைத்து சென்று சமாதானப்படுத்துகிறார்.
மேலும் அந்த திருமணத்தில் தான் சமைக்க போவதாகவும் சொல்கிறார். ராமமூர்த்திக்கு ஏற்கனவே கோபியால் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டது. தற்போது நடக்கும் விஷயங்களை பார்த்து அவருக்கு நெஞ்சு வலியே வந்து விடுகிறது. இந்த தகவல் ஈஸ்வரி வீட்டிற்கும் சொல்லப்பட்டு அனைவரும் பதறியடித்து மருத்துவமனைக்கு வருகின்றனர்.
கோபி மீது கோவப்படும் ராதிகா, கல்யாணத்தை நிறுத்த வந்த ராமமூர்த்தி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
Exams Daily Mobile App Download
ராமமூர்த்தியின் இந்த நிலைக்கு கோபி தான் காரணம் என்பதால் அனைவரும் கோபியை திட்டி தீர்க்கின்றனர். இவ்வளவு நாள் நடக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்த திருமணம் தற்போது ராமமூர்த்திக்கு இப்படி ஆகிவிட்டதால் நிற்பதற்கு வாய்ப்பு அதிகம்.. பொறுத்து இருந்து பார்ப்போம் இனி கதைக்களம் எவ்வாறு மாறப்போகிறது என்று..
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்