திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கான மகிழ்ச்சி செய்தி – நிர்வாகம் வெயிட்ட முக்கிய அறிவிப்பு!
திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா 14 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவஸ்தானம் அறிவிப்பு
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவின் தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருப்பதி மலையில் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி இன்று வெளியிட்டார். அதில் தேவஸ்தானத்தில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா 14 ஆயிரம் ரூபாயும், ஒப்பந்த ஊழியர்களுக்கு தலா 6,850 ரூபாயும் பிரம்மோற்சவ சன்மானமாக வழங்கப்படும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் தீவிரமடையும் கனமழை – 18 பேரிடர் மீட்புக் குழு தயார்!!
மேலும் பிரம்மோற்சவ சன்மானம் வழங்க சுமார் 20 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வரும் 23 ஆம் தேதி நடைபெறும் சீனிவாச திவ்ய அனுகிரக விசேஷ ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.1000 செலுத்தி நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.