தமிழக மக்களுக்கு நல்ல செய்தி.. இனி கரண்ட் பில் பிரச்சனை இல்லை – அரசின் சூப்பர் அறிவிப்பு!

0
தமிழக மக்களுக்கு நல்ல செய்தி.. இனி கரண்ட் பில் பிரச்சனை இல்லை - அரசின் சூப்பர் அறிவிப்பு!
தமிழக மக்களுக்கு நல்ல செய்தி.. இனி கரண்ட் பில் பிரச்சனை இல்லை - அரசின் சூப்பர் அறிவிப்பு!
தமிழக மக்களுக்கு நல்ல செய்தி.. இனி கரண்ட் பில் பிரச்சனை இல்லை – அரசின் சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த மாத கரண்ட் பில் தாறுமாறாக வந்த நிலையில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து இருக்கின்றனர். இந்நிலையில் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு மின்வாரியம் நிறுத்தி இருக்கிறது.

மின் கட்டணம்

தமிழகத்தில் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக டெபாசிட் தொகை வசூலிக்கப்படாமல் இருந்த நிலையில், இந்த மாதம் முதல் வசூலிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கோடை வெயில் அதிகமாக இருந்ததால் ஏசி, பேன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. அதனால் இந்த மாதம் வழக்கத்தை விட அதிகமாக மின் கட்டணம் இருக்கும். அத்துடன் டெபாசிட் தொகையும் சேருவதால் மக்கள் கடுமையான பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு – கருணைத்தொகை ரூ. 1.50 லட்சம்.. அரசு அறிவிப்பு!

மேலும் மின் கட்டணம் கணக்கெடுக்க வரும் போது இது பற்றி எதுவும் சொல்லாமல், கட்டணம் செலுத்த வரும் போது சொல்வதால் மக்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் பல்வேறு வகையில் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதனால் தற்போது டெபாசிட் செலுத்துவதை மின்வாரியம் நிறுத்தி இருக்கிறது. மேலும் இதுவரை வசூலிக்கப்பட்ட தொகை அடுத்த பில்லில் கழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!