விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு – ரூ.44,320க்கு விற்பனை!
தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ. 44,320க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை:
தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நல்ல நாளில் பெரும்பாலான தாய்மார்கள் நகை வாங்க ஆர்வம் செலுத்துவதால் தங்க நகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,000க்கும், சவரனுக்கு ரூ.48,000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5,530 க்கும், சவரனுக்கு ரூ. 44,240 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதாவது, சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.6,010க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ. 48,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Follow our Twitter Page for More Latest News Updates
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.5540க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ. 44,320க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.78.20க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 20 காசுகள் குறைந்து ரூ.78க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.