தமிழகத்தில் ஒரே நாளில் சட்டென்று உயர்ந்த தங்கத்தின் விலை – சவரன் ரூ.42,360க்கு விற்பனை!
சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.42,360க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை:
பங்குசந்தையில் ஏற்படும் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றை பொறுத்தே ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், பண்டிகை தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பொதுவாகவே தங்கத்தின் விலை கணிசமாக உயருகிறது. தற்போது, அனைத்து முக்கிய பண்டிகைகளும் நிறைவடைந்துள்ள நிலையில் தங்கத்தின் விலை சற்று குறைவதும், கூடுவதுமாய் இருந்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5755க்கும், சவரனுக்கு ரூ.46,040க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5285க்கும், சவரனுக்கு ரூ.42,280க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய விலையுடன் ஒப்புடும் போது சென்னையில் இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்திருக்கிறது. அதாவது, 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5765க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு – முதல்வர் அறிவிப்பு!
அதே போல 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5295க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.42,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.73.10க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 40 காசுகள் உயர்ந்து ரூ.73.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.