ஆப்கானிஸ்தானில் பெண்கள் விளையாட தடை – தலிபான்கள் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பெண்கள் விளையாட அனுமதி இல்லை என தலிபான்கள் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
தலிபான்கள் தடை:
ஆப்கானிஸ்தான் அரசியலில் பதற்றம் நிலவி உள்ளது. அங்கு இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிய பின் அங்கிருக்கும் பெரும்பாலான மாகாணங்களை தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அதிபர் அமீரகத்துக்கு தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இதனால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் குறைந்த முதலீடு; அதிக வட்டி – அஞ்சலக திட்டம்!
அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் புதிய பிரதமராக தலிபான் இயக்கத்தின் தலைவர் முகமது ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக முல்லா அப்துல் கனி பரதார் மற்றும் முல்லா அப்துல் சலாம் இருப்பார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலாச்சார ஆணையத்தின் துணைத் தலைவர் அஹ்மதுல்லா வாசிக் நியமிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போது பெண்கள் கிரிக்கெட் அல்லது வேறு எந்த விளையாட்டிலும் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் விளையாட்டு என்பது பெண்களுக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா – முன்னாள் முதல்வர் அறிவுறுத்தல்!
கிரிக்கெட் மற்றும் பிற விளையாட்டுகளை விளையாடும் போது ஆடை கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத காரணத்தால் பெண்கள் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதனை இஸ்லாம் அனுமதிக்காது என தலிபான்கள் கூறியுள்ளனர். பெண்கள் ஷாப்பிங் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் தலிபான் பெண் ஆசிரியர் மட்டுமே ஆப்கானிஸ்தானில் பெண் மாணவர்களுக்கு கற்பிப்பார் என்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் படிக்கும் பெண்கள் (முழு நீள உடை) மற்றும் நிகாப் (முகத்தை மறைக்கும் ஆடை) அணிய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். வகுப்புகளில் ஆண், பெண் என பாலின வேறுபாடுகளுடன் பிரிக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் திரைச்சீலை மூலம் ஆண், பெண் வகுப்புகள் பிரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.