தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா – முன்னாள் முதல்வர் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்தார்.
மாணவர்களுக்கு கொரோனா:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை குறைந்துள்ளதை அடுத்து செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 9 முதல் 12 ம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதே போல ஆசிரியர்களும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகளிலும் அதிகரிக்கும் தொற்று பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஆன்லைன் ஷாப்பிங்கில் கிரெடிட் கார்டுக்கு பதிலாக Card Tokenization சேவை – RBI அறிவிப்பு!
சென்னை, தஞ்சை, கடலூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா தொற்று உறுதியான மாணவர்கள் இருந்த வகுப்பறைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில பள்ளிகள் மூடப்ப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் மிழக சட்டப்பேரவை வளாகத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படையில் நிரந்தர கமிஷனுக்கு பெண்கள் நியமனம் – மத்திய அரசு அறிவிப்பு!
அப்போது பேசிய அவர் மாணவர்களுக்கு தொற்று ஏற்படுவதை கண்டு பெரும் அச்சத்தில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். நோய்த்தொற்று காலகட்டத்தில் மாணவர்கள் அரசு விதித்துள்ள நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வகுப்பறையில் கல்வி கற்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.