பெண்களுக்கான உதவித்தொகை ரூ. 25,000 ஆக உயர்வு – முதல்வர் அறிவிப்பு!
உத்திரபிரதேச மாநில அரசு பெண் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை தற்போது 25,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை:
மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் முன்னேற தேவையான வழி வகைகளை வகுத்து வருகிறது. அத்துடன் அவர்களை பொருளாதார ரீதியாகவும் ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களையும், உதவி தொகை திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த பட்ஜெட் தாக்கலின் போது பெண்களுக்காக மகிலா சம்மன் என்னும் சேமிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது திட்டத்தின் வாயிலாக இன்றைக்கு ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
இனி 15 நிமிடத்தில் சிலிண்டர் வீடு தேடி வரும் – ஈஸியா புக் பண்ணலாம்..விவரம் இதோ!
அதனைத் தொடர்ந்து மாநில அரசுகளும் தனியாக சில திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அத்தகைய திட்டங்களில் ஒன்று கன்யா சுமங்கலா யோஜனா, உத்தரபிரதேச மாநில அரசின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை தற்போது 15,000 – ல் இருந்து 25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.