‘இந்திய அணி குறித்து உங்களுக்கு ஏன் இந்த கவலை’.. ரிக்கி பாண்டிங்கிற்கு பதிலடி கொடுத்த கம்பீர்!!
இந்திய ஆடவர் அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கிடையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 2 சதங்கள் மட்டுமே விளாசி இருப்பது கவலைக்குரியது என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இலவசமாக வழங்கப்படும் HDFC Swiggy கிரெடிட் கார்டு…!! ” ஆர்டெர்க்கு 3 மாதம் Free Delivery”..!!
தற்போது இவரின் கருத்துக்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்திய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், ‘ரிக்கி பாண்டிங்குக்கும் இந்திய கிரிக்கெட்டிற்கும் என்ன சம்பந்தம்? அவர் ஆஸ்திரேலியாவைப் பற்றி பேச வேண்டும்’.’நாங்கள் ஒரு குழுவாக முன்னேறுவோம் என்று நான் நம்புகிறேன்’. ‘அதேசமயம் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை’. ‘அவர்கள் இருவரும் இந்திய கிரிக்கெட்டில் நிறைய சாதித்துள்ளனர்’. ‘தொடர்ந்து அதைச் செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

























