ஜி-20 உச்சி மாநாட்டின் வெற்றி – ஒரே நாளில் இந்திய பங்கு வர்த்தகத்தில் திடீர் முன்னேற்றம்!
இந்தியாவில் நேற்று நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு வெற்றி எதிரொலியாக ஒரே நாளில் இந்திய பங்கு வர்த்தகத்தில் திடீர் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
ஜி-20 உச்சி மாநாடு:
பல்வேறு நாடுகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு இந்தியாவில் நடைபெற்றது. செப்.9 மற்றும் 10 ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் பல உலக நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டு உக்ரைன்-ரஷியா இடையேயான போர், ஜி-20 உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகம் குறித்து பல்வேறு விவாதங்கள் செய்தனர்.
Follow our Instagram for more Latest Updates
மேலும், ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக உலகளாவிய உயிரிஎரிபொருள் கூட்டணி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் வெற்றியாக இன்று ஒரே நாளில் பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் 0.3 முதல் 0.4 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்காக பிரத்யேக ATM அட்டை – தமிழக முதல்வர் இன்று இறுதி கட்ட ஆலோசனை!
இது மட்டுமல்லாமல் ஜி-20 உச்சி மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் செய்யப்பட்ட நிலையில் இன்று பங்கு வர்த்தகத்தில் அனைத்து பங்குகளும் உயர்வடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பங்கு வர்த்தகத்தில் நல்ல மாற்றம் இருக்கும் என முதலீட்டார்கள் தெரிவித்துள்ளனர்.