தமிழகத்தில் 2 வாரங்கள் முழு ஊரடங்கு – இன்று முதல் அமல்!!
மாநிலம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் 2 வாரங்களுக்கு அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று (மே 10) முதல் அமலுக்கு வந்துள்ளது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக இன்று (மே 10) முதல் 24 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இரண்டு வாரங்கள் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று (மே 10) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்குக்கு முன்னதாக மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், நேற்று ஞாயிற்று கிழமை ஒரு நாள் மட்டும், முன்னதாக அமலில் இருந்த பொது முடக்கத்துக்கு தளர்வு அளிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் சிலவற்றிற்கு அனுமதியும், சிலவற்றிற்கு விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மே 24ம் தேதிக்கு பின்னர் முழு ஊரடங்கு? முதல்வர் விளக்கம்!
அதன்படி ஊரடங்கு காலத்தில் பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயங்காது என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை போன்ற தொழில் நகரங்களில் பணிபுரிந்து வந்தவர்கள் நேற்று (மே 10) இரவுக்குள்ளாகவே தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் எப்போதும் ஆரவாரமாக காணப்படும் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்கள் இன்று வெறிச்சோடி காணப்பட்டுகிறது. தமிழக ஊரடங்கு கட்டுப்பாடுகளில்,
- தனியாக செயல்படும் காய்கறி, பலசரக்கு, மளிகைக் கடைகள் குளிர்சாதன வசதியின்றி மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி.
- மருந்தகங்கள், பால், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு.
- தேநீர் கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
- உணவகங்களில் பார்சல் சர்வீஸ் மட்டுமே அனுமதி.
- அம்மா உணவகங்கள் செயல்படும்.
- ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.
Company eallame eirukku athula corana paravatha