தமிழ்நாட்டில் மே 24ம் தேதிக்கு பின்னர் முழு ஊரடங்கு? முதல்வர் விளக்கம்!
இன்று முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மே 24ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பில்லை என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக வேகத்தில் வருகிறது. பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநிலம் முழுவதும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் தொற்று பாதிப்பு குறையவில்லை. இதனால் ஏப்ரல் 20ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கு அமலில் இருந்தது.
தமிழக அரசு ஆசிரியர்களின் ஊதியம் பிடித்தம் – அரசுக்கு கோரிக்கை!!
தொடர்ந்து தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. மே 10ம் தேதியான இன்று முதல் மே 24ம் தேதி வரை தமிழகம் முழுவதும் முழுஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசிய தேவைகளான மளிகை, பலசரக்கு, இறைச்சி கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை செயல் பட அனுமதியளிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
முழு ஊரடங்கினால் வியாபாரிகள் அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் இருக்கும். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். இதனால் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மே 24ம் தேதிக்கு பின்னர் தமிழகத்தில் முழு ஊரடங்கு வர வாய்ப்பில்லை என்றும், மீண்டும் ஊரடங்கு வர வாய்ப்பிருந்தால் தொழில் நிறுவங்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Appointment opportunities for retired official may also be published to help needy person.
Good