தமிழக அரசு ஆசிரியர்களின் ஊதியம் பிடித்தம் – அரசுக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவ முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களது ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யும் படி ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
ஊதியம் பிடித்தம்:
கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பேரிடர் காலத்தில் தமிழக மக்களுக்கு உதவி புரியும் நோக்கத்தில், ஒவ்வொரு ரேஷன் அட்டை தாரர்களுக்கும் தமிழக அரசு சார்பில் 4000 ரூபாய் நிவாரணம் அளிக்கப்படவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கும், தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கும் உதவும் வகையில், முதல்வரின் நிவாரண நிதிக்கு, தங்களது ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யும்படி தமிழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 நிவாரண நிதி – இன்று முதல் வழங்கல்!!
இது குறித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் டி.ஆர் ஜான் வெஸ்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்ட முக ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, அரசின் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, தமிழக அரசுக்கு உதவ விரும்புகிறோம்.
TN Job “FB Group” Join Now
அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும், மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு உதவும்படி ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கும்படி தமிழக ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்’ என கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் 6 மாதத்துக்கு மேலே
சம்பளம் இல்லாமல் வேளை பார்த்துக்கிட்டு இருக்கான். இந்த அரசு ஆசிரியர்கள் சில குடும்பங்களில் கணவனும், மனைவியும் அரசு ஊழியர்களாக இருந்துட்டு ஒரு வருடமாக சரியாக வேலை மும் பார்க்காம மனசாட்சியே இல்லாமல் ஒரு நாள் சம்பளத்தை தருகிறேன் சொல்லறது என்ன நியாயம்?
உங்கள யாரு அரசு வேலையில் சேர வேண்டாம் என்று சொன்னது? சேர்ந்து முழு சம்பளத்தையும் தந்து உதவுங்கள்.குடுக்க வக்கில்லேனாலும் ஏன் ஏசுறிங்க?
That is the beauty of government job