தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 நிவாரண நிதி – இன்று முதல் வழங்கல்!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
கொரோனா நிவாரண நிதி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை மீறி தேவையில்லாமல் வெளியே வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் – அரசு எச்சரிக்கை!!!
இந்நிலையில் 2 வாரம் முழு ஊரடங்கு காரணமாக அன்றாட தொழில் செய்து வருமானம் ஈட்டுவோர் பாதிக்கப்படுவார்கள். இதனால் புதிதாக பதவி ஏற்றுள்ள தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். அதற்கான முதல் தவணையாக ரூ.2000 நிவாரண தொகையை இந்த மாதமே வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள 2 கோடியே 7 லட்சம் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இன்று முதல் ரேஷன் கடைகளில் முதல் தவணை தொகையாக ரூ.2000 வழங்க டோக்கன் வழங்கும் நிகழ்வை தலைமை செயலகத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். முழு ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் டோக்கன் வழங்கப்பட்டுள்ள வரிசை எண் அடிப்படையில் சென்று கொரோனா நிதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.