நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!
கொரோனா நோய்த்தொற்று நாடு முழுவதும் தினசரி அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் நாளை காலை 11 மணி அளவில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நாடு தழுவிய முழு ஊரடங்கினை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முழு ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் மே 24 வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் தன்னிச்சையாக ஊரடங்கு முடிவுகளை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சிறப்பு ஊதியம் – அரசுக்கு கோரிக்கை!!
ஆனால் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என நிபுணர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். எனவே பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாடு தழுவிய கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மாநிலங்களுக்கு இடையே கட்டுப்பாடுகள் வேறுபடுவதால் பயணங்களுக்கு உரிய கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இது கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாகும்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவையை கூட்டி விவாதிக்க உள்ளார். இதில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது, கொரோனா தடுப்பூசி உற்பத்தி & விநியோகம் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.