பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம் – முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!!

0
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம் - முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!!
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம் - முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!!
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம் – முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!!

காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்டத்துறை அமைச்சர் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

முதல்வர் ஆலோசனை:

1991 ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அதிலும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 11 ஆண்டு கால கருணை மனுக்களின் விளைவாக அவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருவதால் பலரும் அவர்களின் ஆயுள்தண்டனையை ரத்து செய்ய கோரிக்கைகள் வைத்துள்ளனர். இது தொடர்பாக பல வழக்குகள் உச்ச நீதிமன்றம் மற்றும் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு இறுதியான முடிவை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தற்போது, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக தலைமை அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னதாக கூட்டணி கட்சித் தலைவர்களும் இது தொடர்பாக முதல்வரிடம் வலியுறுத்தி இருந்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!