டிச.11ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – ஒமைக்ரான் அச்சறுத்தல் எதிரொலி!

0
டிச.11ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல் - ஒமைக்ரான் அச்சறுத்தல் எதிரொலி!
டிச.11ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல் - ஒமைக்ரான் அச்சறுத்தல் எதிரொலி!
டிச.11ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – ஒமைக்ரான் அச்சறுத்தல் எதிரொலி!

ஆஸ்திரியா நாட்டில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிக அளவில் பரவி வருவதால் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு இன்றுடன் முடிவிற்கு வந்த நிலையில், மீண்டும் டிசம்பர் 11ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு:

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அடுத்த சில வாரங்களில் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. வைரஸ் பரவல் அதிவேகத்தில் இருந்து வந்ததால் உலக நாடுகள் அனைத்தும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தொடங்கியது. இதனால் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகள் மற்றும் வர்த்தகம் போன்றவை தடை செய்யப்பட்டது. முதல் அலையின் பாதிப்பு சற்று குறைவதற்கு 2021ம் ஆண்டு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பெரும் பங்காற்றியது.

தூத்துக்குடியில் டிச.3 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

உலக நாடுகள் அனைத்து கொரோனா தடுப்பூசிகளை தீவிரமாக மக்களுக்கு செலுத்தி வந்தது. இதனால் சிறிது குறைய தொடங்கிய முதல் அலை, மக்களின் அலட்சிய போக்கின் காரணமாக மீண்டும் 2ம் அலையாக பரவ தொடங்கியது. இதில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டது. தீவிர கட்டுப்பாடுகளின் விளைவால் தற்போது சமீபத்தில் தான் கொரோனா பரவல் குறைந்து வந்தது. ஆனால் தென் ஆப்பிரக்க நாட்டில் கொரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வகை தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் கடும் அதிர்ச்சியில் இருந்து வருகிறது.

மத்திய வங்க கடலில் உருவாகும் ‘ஜாவித்’ புயல் – தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!

மேற்கு ஐரோப்பா நாடான ஆஸ்திரியாவில், கொரோனா வைரஸ் தொற்று நவம்பர் மாதம் முதல் அதிக அளவில் பாதிப்புகளை உறுதி செய்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கையாக நவம்பர் 22ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடைந்த நிலையில், டிசம்பர் 11ம் தேதி வரை மேலும் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதம் வர இருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!