தூத்துக்குடியில் டிச.3 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் பட்டப்படிப்பை முடித்து வெளியில் வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே சமயம் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக பல முன்னணி நிறுவனங்கள் பெரும் பொருளாதார பாதிப்பினை கண்டன. இதன் காரணமாக பலரும் வேலை இழந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மத்திய வங்க கடலில் உருவாகும் ‘ஜாவித்’ புயல் – தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!
மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. பல முன்னணி தனியார் நிறுவனங்கள் தகுதியான மற்றும் திறமையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்படுகிறது.
சென்னை: மீண்டும் அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் உற்சாகம்!
இந்த முகாமில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கு பெற உள்ளன. 10, 12 ஆம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ, பொறியியல் மற்றும் கணினி பயிற்சி போன்ற கல்வித்தகுதி உடையவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் குறித்த கூடுதல் விவரங்களை அறிய 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.