மத்திய வங்க கடலில் உருவாகும் ‘ஜாவித்’ புயல் – தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!
அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய வங்க கடலில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புதிய புயலுக்கு ஜாவித் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
‘ஜாவித்’ புயல்:
வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஒரு மாத காலமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இரவு, பகலாக பெய்த தொடர் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் மழைநீர் தேக்கமுற்று வெள்ளக்காடாய் காட்சியளித்தது. இத்தகைய சூழலில் மக்கள் வீட்டை வீட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். தமிழகத்தை போலவே ஆந்திராவிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. முக்கிய பகுதிகள் மழையால் சேதமடைந்ததால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
இந்த நிலையில் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மீண்டும் கனமழை தீவிரமெடுத்து பாதிப்புகளை அதிகப்படுத்தியது. இதனால் தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய வங்கக்கடலில் புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு 2022 – முதல்வர் ஆலோசனை!
இந்த புதிய புயலுக்கு ஜாவித் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடக்கு திசை நோக்கி நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் மேலும் நாளை புயலாக வலுப்பெற்றது மத்திய வங்கக்கடல் பகுதிக்கு நகரும். இந்த புயல் ஆந்திரா – தெற்கு ஒடிசா இடையே நாளை மறுநாள் கரையை கடக்கும். அதனால் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்று மணிக்கு 110 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.