மீண்டும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல் – பிரதமர் ஆலோசனை!
சமோவாவில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்புகள் காரணமாக தடுப்பு பணியாக தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு:
உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் முதன் முதலில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கியது. சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் விரைவாக பரவத் தொடங்கியது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், கிருமி நாசினிகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு – திருநெல்வேலியில் முகாம்!
இந்த தடுப்பூசிகள் முதலில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டது. தற்போது 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் முதல் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் தீவு நாடான சமோவாவில் முதன் முறையாக பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பு பணியாக அந்நாட்டில் ஏப்ரல் 5ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டது.
கிழிந்த ரூபாய் நோட்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க பிரதமர் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தகவல் வந்துள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முயற்சித்து வருகின்றனர்.