கிழிந்த ரூபாய் நோட்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை எளிதாக வங்கியில் மாற்றி கொள்ளலாம். எந்த அளவுக்கு கிழிந்துள்ளது என்பதைப் பொறுத்து உங்களுக்கு ரூபாய் வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுகள்:
இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் அதனை வங்கியில் கொடுத்து அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பெறலாம் என்று தெரிவித்தது. இதனால் நாட்டின் பொருளாதாரமே தலைகீழாக திரும்பியது. இந்த அறிவிப்பால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பழைய ரூபாய் நோட்டுகளை புது ரூபாய் நோட்டாக மாற்ற மணிக் கணக்கில் வங்கிகள் மற்றும் ஏடிஎம் வாசலில் வரிசையில் நின்றனர்.
1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விடுமுறை நாட்கள் ஒத்திவைப்பு!
பழைய ரூபாய் நோட்டிற்கு பதிலாக புதிய ரூ.5, 10, 20, 50, 100, 500, 1000 ஆகிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. கிழிந்த ரூபாய் நோட்டுகள் கடைகள், பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் செல்லாததாக கருதப்படுகிறது. பெரும்பாலும் ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தால் அதனை யாரும் வாங்குவதில்லை. இது செல்லாது என்றும் கூறுகின்றனர். ஆனால் உண்மை அது இல்லை. ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தால் அதை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – பேச்சுப்போட்டி அறிவிப்பு!
மேலும் கிழிந்த ரூபாய் நோட்டை மாற்றும் போது அது கிழிந்திருக்கும் நிலையைப் பொறுத்து அதன் மதிப்பு மாறும். ரிசர்வ் வங்கியின் விதிமுறைப் படி 3 நிலைகளில் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றலாம். மங்கிய நோட்டுகள், கிழிந்த நோட்டுகள், ஒரிஜினல் தன்மை உள்ள நோட்டுகள், ஒட்டவைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஆகியவைகளை மாற்றி கொள்ளலாம். மேலும் ரூபாய் நோட்டுகளில் எழுதப்பட்டிருந்தாலும் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் தெரிவித்துள்ளது. அதற்கான பரிவர்த்தனை கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.