சென்னை பேருந்துகளுக்கு இனி புது ரூல்ஸ்…!! போக்குவரத்து கழகம் வெளியிட்ட முக்கிய தகவல்…!!
தமிழக அரசு பொது மக்களின் நலன் கருதி மலிவு விலையில் தமிழகம் முழுவதும் பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்கு சென்னை போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் பெரும்பாலும் தாம்பரம் பேருந்து நிலையம் வரை இயக்கப்பட்டது. இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உள்ளதாக கூறப்பட்டது. எனவே, “போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, இனி தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்படாது என்றும், வெளியூர்களில் இருந்து வரும் அனைத்து அரசு பேருந்துகளும் இன்று (04.03.2025) முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையதோடு நிறுத்தப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது”.



























