புத்தாண்டையொட்டி அரசு ஊழியர்களுக்கான சிறப்பு சலுகை – இலவச மருத்துவ வசதி!!

0

புத்தாண்டு பண்டிகையையொட்டி ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ வசதி வழங்கப்பட்டுள்ளது.

 இலவச மருத்துவம்:

ஹரியானா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கென அரசு ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது புத்தாண்டு பண்டிகையையொட்டி அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு பணமில்லா மருத்துவ வசதியை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் சோதனை ஓட்டமாக, கடந்த நவ.1 ஆம் தேதி மீன்வளம் மற்றும் தோட்டக்கலைத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பணமில்லா மருத்துவ வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

இதனால், லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைந்த நிலையில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில், அனைத்து அரசு ஊழியர்களின் மருத்துவ செலவு மற்றும் குடும்பத்தாரரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும். மேலும், அரசு ஊழியர்கள் பரிவார் பெஹ்சான் பத்ரா (குடும்ப ஐடி) எண் அல்லது ஆதார் எண் மூலமாக இலவசமாவே மருத்துவம் பார்க்கலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!