தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி – ஏப். 20 முதல் விண்ணப்பபதிவு துவக்கம்!
தமிழகத்தில் 2023 – 2024 ம் கல்வியாண்டுக்கான கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் (RTE) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பபதிவு ஏப்.20ம் தேதி முதல் துவங்கவுள்ளது. தகுதி பெற்றவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
RTE மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பொருளாதாரரீதியாக பின் தங்கிய பிரிவை சேர்ந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி பயில அரசு 25% இட ஒதுக்கீட்டை வழங்கபடுகிறது. இதன் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விச் செலவை அரசே ஏற்கும். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக வரவேற்கப்பட்டு வருகிறது .
இந்தியாவில் புதிதாக 2 ஆப்பிள் ஸ்டோர்ஸ் திறப்பு – CEO டிம் குக் வருகை!
அந்த வகையில் நடப்பு ஆண்டு RTE மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பபதிவு வரும் 20ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 2023 – 2024 ம் கல்வியாண்டில் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் மொத்தமுள்ள 12,000 தனியார் பள்ளிகளில் 1.50 லட்சம் இடங்கள் உள்ளது. இதில் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் அடங்கிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் வரும் பள்ளிகளில் மே – 30ம் தேதி குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது .
Exams Daily Mobile App Download