பிப்.,28 தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை!!
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28ம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் – மாணவர்கள் கோரிக்கை!!
இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
முன்னேற்பாடு பணிகள்:
முகாம் நடப்பதற்கான முன்னேற்பாடுகள் சார்ந்த கூட்டம் கடந்த வியாழக்கிழமை அன்று நாமக்கல்லில் நடந்தது.
அதில், வேலைவாய்ப்பு பிரிவின் கோவை மண்டல இணை இயக்குனர் ஆ.லதா அவர்கள் முகாம் நடப்பதற்கு முன்பாக பல்வேறு துறைகள் சார்பாக நடக்க வேண்டிய பணிகள் குறித்தும், முகாம் நடக்கும் போது செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், முகாம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். கோட்டத்தில் அனைத்து முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்