பிப்.,28 மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
தமிழக அரசு:
தமிழக அரசு மாநிலத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உண்டாக்கி கொடுக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நிர்வகிக்கிறது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தருமபுரியில் நடக்க உள்ள வேலைவாய்ப்பு முகாம் குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.20 லட்சம் காப்பீடு – புதிய திட்டம் அறிவிப்பு!!
தருமபுரி முகாம்:
தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வரும் 28ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் அரசு கலை கல்லூரியில் நடத்துகிறது. இது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 8 முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, ஐடிஐ, தொழிற்கல்வி பெற்றவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்களும், விண்ணப்பதாரர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அனுமதி இலவசம். முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு போன்ற வழிகாட்டுதல்கள் நடக்க உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்