தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ. 20 லட்சம் காப்பீடு – புதிய திட்டம் அறிவிப்பு!!
தமிழக அரசின் 2021-2022ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கான காப்பீடு தொகையை 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வந்துள்ளது.
இடைக்கால பட்ஜெட்:
தமிழக அரசின் 2021ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் கடந்த பிப்ரவரி 2ம் தேதி அன்று நடந்தது. முதல் உரையை மாநில ஆளுநர் தொடங்கி வைத்தார். மேலும், இரண்டாவது சட்டசபை கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, நேற்று தமிழக நிதியமைச்சர் பன்னீர் செல்வம் அவர்கள் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தமிழக நெசவாளர்களுக்கு ரூ.2,000 நிதியுதவி – இடைக்கால பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு!!
புதிய திட்டம்:
அதில் அரசு ஊழியர்களுக்கான காப்பீடு தொகையை 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் ஜூன் மாதம் முடிவடைகிறது. இதன் பின்னர் புதிய காப்பீடு சலுகை திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி, குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு 10 லட்சம் ரூபாயும், அரிய வகை நோய்கள் மற்றும் அசாதாரண நிகழ்வுகளுகு 20 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
இளைஞர் நலன்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கான சிறப்பு திட்டத்துக்கு ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்காக 229.37 கோடி ரூபாயும், ஆதிதிராவிடர் சிறப்பு திட்டத்துக்கு ரூ.13,967.58 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பணிகளுக்காக ரூ.688.48 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்