தமிழக நெசவாளர்களுக்கு ரூ.2,000 நிதியுதவி – இடைக்கால பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு!!
இடைக்கால பட்ஜெட்:
தமிழக அரசு நடப்பு நிதி ஆண்டான 2021-2022க்கான இடைக்கால பட்ஜெட்டை நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தது. நிதியமைச்சர் பன்னீர் செல்வம் அவர்கள் தமிழகத்தின் நிதி அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் மாநில அரசால் எதிர்பார்த்த வருவாய் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் பலத்த நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
பயணிகள் சேவையில் மதுரை விமான நிலையம் 2ம் இடம் – ஆய்வு முடிவுகள்!!
திட்டங்கள்:
மேலும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காவும் பல முக்கிய திட்டங்களையும் அறிவித்துள்ளார். அதன்படி, சமூக நலத்துறையின் கீழ் செயல்படும், சத்துணவு திட்டத்திற்கு ரூ.1,953.98 கோடியும், வளரினம் பெண்களுக்கு ஊட்டச்சத்து நிலையை அதிகரிக்க ரூ.2,634 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் திறன் மேம்பாட்டு கழகத்துக்கு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மூலம் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிக அளவில் வழங்கப்படுகிறது. மேலும், 1.58 லட்சம் நெசவாளர்களுக்கு மாதம் ரூ.2,000 நிதிஉதவி வழங்கப்படுகிறது. நெசவு துறைக்கென்று அரசு தனியாக ரூ.1,224.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்