பயணிகள் சேவையில் மதுரை விமான நிலையம் 2ம் இடம் – ஆய்வு முடிவுகள்!!
இந்தியாவில் உள்ள 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்களில் 2020ம் ஆண்டு பயணியரின் மனநிறைவு குறித்து உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டுள்ளது.
தனியார் நிறுவனம்:
இந்தியாவில் உள்ள டுமாரோஸ் மார்க்கெட் இன்னோவேட்டர்ஸ் என்ற தனியார் நிறுவனம் உத்திரப்பிரதேசத்தில் உள்ளது. இந்த நிறுவனம் 2020ம் ஆண்டிற்கான இந்தியாவிற்குள் உள்ள 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை பயணிகள் வரக்கூடிய விமான நிலையங்களில் பயணியர் மனநிறைவு குறித்து ஆய்வு செய்துள்ளது.
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் – புதிய திட்டம்!!
ஆய்வு முடிவுகள்:
கடந்த 2019ம் ஆண்டின் இதே ஆய்வின் முடிவில் மதுரை விமான நிலையம் 4வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் 2020ம் ஆண்டுக்கான ஆய்வு முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. மொத்தம் 57 விமான நிலையங்கள் இந்தியாவில் 10 முதல் 15 லட்சம் பயணியர் வந்து செல்லும் வகையில் உள்ளது. இதில், பயணிகளின் சேவை, மனநிறைவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2020 ஜூலை முதல் டிசம்பர் வரை நடந்த ஆய்வின் முடிவில், உதய்பூர் விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. மதுரை விமான நிலையம் 2ம் இடத்தை பிடித்துள்ளது. 15 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளை கொண்ட விமான நிலையங்கள் இந்த ஆய்வுக்கு உட்படவில்லை.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்