வெண்பா ஃபரினா பிறந்தநாளிற்கு கடைசியாக வாழ்த்து தெரிவித்த பாரதி – ரசிகர்கள் அதிர்ச்சி!
பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் மிகவும் நெருங்கிய நண்பர்களாக அருண் மற்றும் ஃபரினா உள்ளனர். இந்நிலையில், இவர்களை பற்றிய புது தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
வெண்பாவின் பிறந்த நாள்:
பாரதி கண்ணம்மா சீரியல் தொடங்கிய காலம் முதல் அந்த தொடர் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இத்தனை வருடங்கள் தொடரும் சீரியலின் விளைவால் அதில் உள்ள அனைத்து பிரபலங்களும் தற்போது ஒரு குடும்பத்தை போல் நெருங்கிய நட்புடன் பழகி வருகின்றனர். இவர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்களை கொண்டுள்ளனர்.
இதனால் இவர்கள் செய்யும் சின்ன விஷயங்கள் கூட அதிக கவனம் பெறுகின்றது. சமீபத்தில் வெண்பாவிற்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. அதில், பாரதி கண்ணம்மா குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும், பரிசுகளை வழங்கியும் வந்தனர். இந்த நிகழ்ச்சி இணையத்தை கலக்கிய சம்பவங்களில் முக்கிய ஒன்றாக உள்ளது. இந்நிலையில், ஃபரினாவிற்கு இன்று பிறந்த நாள்.
கோபிக்கு கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிறாங்களே’ – ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்!
இதற்காக அவரின் சின்னத்திரை பிரபல நண்பர்கள் அனைவரும் நேற்று முதல் அவர்களது இன்ஸ்டா பக்கத்தில் பிறந்த வாழ்த்தை தெரிவித்து வந்தனர். ஆனால் பாரதி அருண் மட்டும் வாழ்த்தை பதிவு செய்யாமல் இருந்தார். இந்நிலையில், தற்போது அருணும் ஃபரினாவிற்கு வாழ்த்தை கடைசியாக தெரிவித்துள்ளார். நெருங்கிய நண்பர்களாக இவர்கள் உள்ள நிலையில், கடைசியாக வாழ்த்து தெரிவித்து இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.