பாக்கியாவுடன் திருமண உறவை முறித்து ராதிகாவுடன் வாழ திட்டமிடும் கோபி – ‘பாக்கியலட்சுமி’ அடுத்த எபிசோடு!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அப்பா ராமமூர்த்திக்கு கோபி பற்றிய அனைத்து உண்மைகளும் தெரியவந்திருந்தாலும் இன்னும் நான் ராதிகாவை தான் காதலிக்கிறேன், அவரை கை விட மாட்டேன் என தனது நண்பரிடம் வீர வசனம் பேசுவது போல அடுத்த எபிசோடு வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
சமீப காலமாக அதிகபட்ச ரசிகர்களின் கவனம் ஈர்த்திற்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாக்கியலட்சுமி’. அந்த வகையில் இதுவரை பாக்கியாவை சுற்றி மட்டுமே நகர்ந்து வந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் காட்சிகள் தற்போது கோபி பக்கம் திரும்பி இருக்கிறது. ஏறத்தாழ ஒரு வருடமாக தனது வீட்டாருக்கு தெரியாமல் தனது கல்லூரி கால காதலி ராதிகாவுடன் நெருக்கமாக பழகி கொண்டிருக்கிறார் கோபி. ஆனால் எதிர்பாராத விதமாக கோபியின் மனைவி பாக்கியா மற்றும் காதலி ராதிகா இருவரும் தோழிகளாக மாறுகின்றனர்.
கோபிக்கு கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிறாங்களே’ – ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்!
இப்போது ராதிகாவுடன் இருக்கும் அந்த உறவை மறைக்க கோபி படாத பாடு படுகிறார். இப்படி இருக்க ஒருநாள் கோவிலில் வைத்து தனது அப்பாவிடம் கையும் களவுமாக மாட்டி கொள்கிறார் கோபி. என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பத்தாரிடம் இருந்து அந்த உண்மையை மறைக்க நினைக்கும் கோபியின் அப்பா ராமமூர்த்தி, கோபியை தனியாக சந்தித்து கண்டிக்கிறார். ஆனால் அப்பா தன்னுடைய ரகசியத்தை பற்றி வீட்டாரிடம் சொல்ல மாட்டார் என்ற தைரியத்தில் கோபி தனது லீலைகளை தொடர்ந்து வருகிறார்.
இப்படி இருக்க ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் புதிய எபிசோடில் கோபி ராதிகாவை பார்க்க வருவது சரி இல்லை என கோபப்படும் ராதிகாவின் அம்மா அவரையே திருமணம் செய்து கொள்ளும்படி கூறுகிறார். மறுபக்கத்தில் கோபி, தான் ராதிகாவை தான் காதலிப்பதாகவும், பாக்கியாவை பிடிக்கவில்லை என்றும் தனது நண்பரிடம் கூறுகிறார். இருந்தாலும் பிள்ளைகள் தனக்கு முக்கியம் என்றும் மீதமிற்கும் வாழ்க்கையை ராதிகாவுடன் செலவழிக்க வேண்டும் என்றும் பேசுகிறார்.
காதலியை கரம் பிடிக்கும் அஜித்தின் ‘வலிமை’ பட வில்லன் – கல்யாண தேதி அறிவிப்பு! ரசிகர்கள் குஷி!
கோபியின் இந்த மாற்றம் அவரது வீட்டிற்குள் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என கோபியின் நண்பர் கூற அது பற்றி தனக்கு கவலை இல்லை என்று தனது தீர்க்கமான முடிவு குறித்து பேசி சற்று அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். இப்போது கோபியின் செயலால் அவரது குடும்பத்தில் எந்த விதமான மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.