தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் இன்று முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை அரசை கண்டித்து வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்த அறிவிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் அதிக அளவில் இயங்கி வருகிறது. தொழிற்சாலைகளின் மூலமாக சுற்றுப்பகுதிகளை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிக அளவு சீன பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருவதை எதிர்த்து அரசு தடை விதிக்க வேண்டும் என்று தீப்பெட்டி தொழிற்சாலைகள் சார்பாக கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இருப்பினும் இதன் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இதனை எதிர்த்து தூத்துக்குடி மாவட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஏப்ரல் 13ஆம் தேதியான இன்று முதல் 22ஆம் தேதி வரை வேலைநிறுத்தம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.
UPSC CSE 2023 தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு? – பதிவிறக்கும் வழிமுறைகள்!
வடமாநிலங்கள், வெளிமாநிலங்களுக்கு தீப்பெட்டி பண்டல் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள், 1200க்கும் மேற்பட்ட பார்க்கிங் யூனிட்டுகளை மூடி பணியாளர்கள் தங்களது எதிர்ப்பை வேலை நிறுத்தம் மூலமாக வெளிக்காட்டி வருகின்றனர்.பத்து நாட்கள் வேலை நிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு ₹6 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.