10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு.. கூடுதல் நேர வகுப்புகளுக்கு ஏற்பாடு – ஒடிசா அரசு அறிவிப்பு!
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கூடுதல் வகுப்புகள்:
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஆண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். அந்த வகையில் 2022 – 2023ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகளை நடத்த மாநில அரசும், மத்திய கல்வி வாரியமும் தயாராகி விட்டது.
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அரசின் முக்கிய அறிவிப்பு வெளியீடு – 12ம் தேதிக்குள் விநியோகம்!
ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தற்போது பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. இதனை அறிந்து மாணவர்கள் இப்போதிலிருந்தே தேர்வுக்கு படித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒடிசாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு தயார்ப்படுத்தும் நோக்கிலும் அவர்களுக்கு போதிய பயிற்சியளிக்கவும் கூடுதல் நேர வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு பிறகு மாணவர்கள் தேர்வு எழுதும் போது நேர மேலாண்மை செய்வதில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். மேலும் தொற்று காலத்திற்கு முன்பு இருந்தது போல எழுத்து மற்றும் கற்றல் திறன்கள் மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்று பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதனால் 40 நிமிட வகுப்புகள் போதாது. கூடுதல் நேரம் வகுப்புகள் நடத்தப்பட்டால் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர். இதனை அடிப்படையாக வைத்து கூடுதல் நேர வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.