பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அரசின் முக்கிய அறிவிப்பு வெளியீடு – 12ம் தேதிக்குள் விநியோகம்!
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் மிக தீவிரமாக செய்யப்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்கான அறிவுரைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பொங்கல் பரிசு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் ரேஷன் ஊழியர்கள் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அறிவுரைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. அதிரடி விலை ஏற்றத்தை கண்ட ஆபரண தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
Follow our Instagram for more Latest Updates
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஜனவரி 12ம் தேதிக்குள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்பில் 6 அடி அல்லது 6 அடிக்கு மேல் இருக்கும் கரும்புகளை மட்டுமே வழங்க வேண்டும். அத்துடன் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இதே போல், 1000 ரூபாய் ரொக்கப்பணத்தை இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக மட்டுமே வழங்க வேண்டும் என்றும் சில்லறையாக வழங்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது . இதையடுத்து, டோக்கனில் இருக்கும் தேதிக்கு பதிலாக மற்றொரு தேதியில் பொங்கல் பரிசு பெற வரும் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக பொங்கல் பரிசு தொகுப்பு 100% தரத்தை கொண்டதாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.