தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட 93000 குழந்தைகளுக்கு சிறப்பு உணவுகள் – ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்!
தமிழக முதல்வர் தொடங்கிய ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் ஊட்ட சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு உணவுகள் அளிக்கப்பட்டு வருகின்றது.
ஊட்டச்சத்து திட்டம்:
தமிழக அரசு அனைத்து வயதினருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், வளர் இளம் பெண்கள் என்று மொத்தம் இதுவரை ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் 32,51,509 பேர் பயனடைந்து வருகின்றனர். மேலும், இதற்காக தமிழக அரசு ரூ.2,765 கோடியை கடந்த ஆண்டு செலவிட்டது.
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு- தேர்வு கிடையாது!
தற்போது நடப்பாண்டு ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான சோதனைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதில், 6 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு சத்து நிறைந்த உணவு பொருட்கள் அடங்கிய உணவு பெட்டகமும், 6 மாதம் முதல் 6 வயதிற்கு உட்பட்ட 93,200 குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்களுடன் அரசு வழங்கியுள்ளது. எனவே, அங்கன்வாடி மையம் மூலம் இத்திட்டம் குறித்த தகவல்களை அறிந்து கொண்டு மக்கள் பயனடைய வேண்டும் என்று சமூக நலத்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Join Our WhatsApp
Group” for Latest Updates