தமிழகத்தில் நவ.20ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு முகாம்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் பெரும் பொருளாதார பாதிப்பினை கண்டது. அதன் காரணமாக பலர் தங்களது வேலையை இழந்துள்ளதால் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாட தொடங்கியது. இந்த நிலையில் அரசு மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அபராதம், புதிய கட்டுப்பாடுகள் – அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் நிறுவனங்கள் மீண்டும் பொருளாதார ரீதியாக மேலெழுந்து வருகிறது. எனவே தனியார் நிறுவனங்கள் தகுதியான மற்றும் திறமையானவர்களை கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளன. அதனை தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம் மூலம் ஆட்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
3 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கனமழை எதிரொலி!
மற்ற பகுதிகளை தொடர்ந்து மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக புதுக்கோட்டையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. நவ.20-ம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இந்த முகாமில் ஆர்வமுள்ளவர்கள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நேரில் சென்று கலந்துகொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள வரும் இளைஞர்கள் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் கவிதா ராமு கூறியுள்ளார்.