தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அபராதம், புதிய கட்டுப்பாடுகள் – அதிரடி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்த மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் செலுத்துவதன் மூலம் மனித உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்றில் இருந்து தடுக்கிறது. கொரோனா தடுப்பூசிகள் செலுத்த தொடங்கியது முதல் அனைத்து நாடுகளிலும் தொற்று பரவல் குறைந்து வருகிறது. உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சில தவறான கருத்துகளால் சிலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் நவ.19ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
அதனால் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவியுள்ளது. இதனால் அனைத்து நாட்டு அரசுகளும் 100% தடுப்பூசி இலக்கை அடைந்தாக வேண்டும் என்ற நோக்கிலும், தடுப்பூசி செலுத்தாத மக்களை தடுப்பூசி செலுத்த ஊக்குவிக்கவும் பல விழிப்புணர்வுகளையும் மக்களுக்கு அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி செலுத்த மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 65% மக்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர்.
சபரிமலை செல்பவர்கள் கவனத்திற்கு – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வருகிறது. அதனால் தடுப்பூசி செலுத்தாத மக்களை தடுப்பூசி செலுத்த வைக்கும் நோக்கில் ஆஸ்திரேலியா அரசு புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. அதன்படி தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களை அனுமதிக்கும் வர்த்தக நிறுவனங்கள், தியேட்டர்களும் அபராதம் விதிக்கப்படும். மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைக்கு மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.