3 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கனமழை எதிரொலி!
கேரளா மாநிலத்தில் அதிக கனமழை தொடர்ந்து பெய்து வரும் காரணத்தால் ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு:
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மாநிலத்தில் அதிக பாதிப்புகள் உள்ள மாவட்டங்களில் திங்கட்கிழமையான நேற்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி, கோட்டயம், இடுக்கி, கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிற்கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர். எர்ணாகுளத்தில் திங்கள்கிழமை ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும். மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு செல்லத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 2 ஆண்டு செவிலியர் பயிற்சி – நவ.23 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
கனமழை காரணமாக நேற்று மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைத்தது. கேரள பல்கலைக்கழகம் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கவிருந்த இரண்டாம் செமஸ்டர் எம்ஏ, எம்எஸ்சி, எம்சிகாம், எம்எஸ்டபிள்யூ மற்றும் எம்சிஜே தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. இதேபோல், நவம்பர் 16ம் (இன்று) கேரளா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.
சென்னை: இன்று (நவ.16) ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிப்பு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
இதனால் நவம்பர் 16ம் தேதியான இன்றும் ஆன்லைன் வகுப்புகளை நடத்த கல்வி நிறுவனங்களுக்கு கோட்டயம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அனைத்து சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் பொருந்தும். மேலும், மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் இன்று நடக்க இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார். தேர்வு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், திருத்தப்பட்ட தேர்வின் அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.