சென்னை: இன்று (நவ.16) ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிப்பு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து சென்னையில் கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையிலேயே உள்ளது.
தங்கத்தின் விலை:
தமிழகத்தை பொறுத்தவரை தங்கம், வெள்ளி விலையானது தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்தியாவின் தென் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பெரும்பாலும் நகை விரும்பிகளாக இருந்து வருகின்றனர். அதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே இருந்து வருகின்றது. ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்கள் தங்கத்தில் கவனம் செலுத்தாததால் அதன் விலை விலை பெரும் சரிவை கண்டிருந்தது.
தமிழகத்தில் நாளை (நவ.17) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் விலை அதிகமாக இருந்தாலும் தங்க ஆபரணத்தின் மீதான ஆசையின் காரணமாக அதனை பெரும்பாலான மக்கள் தற்பொழுது வாங்க தொடங்கியுள்ளனர். மக்களது தேவையின் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது என்றும் கூறலாம்.
ஹர்திக் பாண்ட்யாவின் பல கோடி மதிப்புள்ள வாட்ச்கள் பறிமுதல் – ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?
ஆனால் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆபரண தங்கத்தின் விலை சற்று சரிவை கண்டிருந்தது. இப்போது முகூர்த்த நாட்கள் அதிகம் வருவதால் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,650 க்கும், ஒரு சவரன் ரூ.37,200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.50 க்கும் விற்பனை ஆகிறது.