ஹர்திக் பாண்ட்யாவின் பல கோடி மதிப்புள்ள வாட்ச்கள் பறிமுதல் – ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?

0
ஹர்திக் பாண்ட்யாவின் பல கோடி மதிப்புள்ள வாட்ச்கள் பறிமுதல் - ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?
ஹர்திக் பாண்ட்யாவின் பல கோடி மதிப்புள்ள வாட்ச்கள் பறிமுதல் - ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?
ஹர்திக் பாண்ட்யாவின் பல கோடி மதிப்புள்ள வாட்ச்கள் பறிமுதல் – ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா வாங்கிய இரண்டு புதிய வாட்ச்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது காரணமாக ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் மூலம் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார்.

கிரிக்கெட் வீரர்:

இந்திய கிரிக்கெட் அணியில் 2021 ஐபிஎல் தொடரிலும், 2021 டி20 உலகக் கோப்பை தொடரிலும் ஹர்திக் பாண்டியா சரியாக ஆடவில்லை. இவருக்கு ஒன்றை ஆண்டுகளுக்கு முன் காலில் செய்த ஆபரேஷன் காரணமாக அவர் இந்திய அணிக்கு பந்து வீசவில்லை. இவரின் பேட்டிங்கிலும் பார்ம் இல்லை. இதனால் உலகக் கோப்பை தொடரின் போதே ஹர்திக் பாண்டியாவை எடுக்க கூடாது என்று ரசிகர்கள் வலியுறுத்தினார். ஆனால் ஹர்திக் பாண்டியாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தும் கூட ஹர்திக் பாண்டியா சரியாக ஆடவில்லை

டிச.13 முதல் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலை அறிவிப்பு!

மேலும் இந்திய அணியும் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவியது. இதையடுத்து தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி 20, டெஸ்ட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா புறக்கணிக்கப்பட்டார். இந்நிலையில் மும்பை ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் மூலம் ஹர்திக் பாண்டியா கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். இதற்கு காரணம் இவர் வைத்திருந்த இரண்டு வாட்ச்கள் தான். இவை இரண்டுமே புதிய வாட்சுகள் ஆகும். அதை ஒன்றை கையில் கட்டி இருந்துள்ளார். இன்னொன்று அவரின் கை பையில் இருந்துள்ளது. இதன் இரண்டின் மதிப்பு ரூபாய் 1.5 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? ஆட்சியர் உத்தரவு!

இவ்வளவு விலை மதிப்புள்ள வாட்ச்களை துபாயில் இருந்து வாங்கி வர பில் தேவை. ஆனால் ஹர்திக் பாண்டியாவிடம் இதற்கான சில ஆவணங்கள் இல்லை. அதனால் அவர் கூடுதல் இறக்குமதி வரி கட்ட வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அவரது இரண்டு வாட்ச்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவரை தீவிர சோதனை செய்தனர். இவர் கூடுதல் இறக்குமதி வரி கட்டி சில ஆவணங்களை கொடுத்த பின் வாட்ச் திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!