சபரிமலை செல்பவர்கள் கவனத்திற்கு – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடை திறக்கப்பட்டாலும் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன்:
சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மண்டல, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இங்கு கார்த்திகை மாதம் 1 -ந் தேதி முதல் 60 தினங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
3 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கனமழை எதிரொலி!
நேற்று பூஜைகள் ஏதும் நடைபெறாத நிலையில் இரவு 10 மணிக்கு அரிவராசனம்பாடி நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தினசரி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், மதியம் 12 மணி வரை நெய் அபிஷேகம், உச்சபூஜைக்கு பின்பு 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.
சென்னை: இன்று (நவ.16) ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிப்பு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
அதே சமயம் கேரளா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக வியாழக்கிழமை வரை பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தரிசனத்திற்கு குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதே சமயம் பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.