மாநிலம் முழுவதும் நவ.19ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
உத்தரபிரதேச மாநிலத்தில் கார்த்திக் பூர்ணிமா பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 19ம் தேதியன்று பொது விடுமுறையை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான நோய் தடுப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் படி அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொது விடுமுறை
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு, நவம்பர் 19ம் தேதியன்று கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு பொது விடுமுறையை அறிவித்திருக்கிறது. அதாவது கொரோனா 2ம் அலை பரவல் நாடு முழுவதும் குறைந்திருக்க கூடிய சூழலில் பண்டிகைகளை கொண்டாடுவதற்கு உத்தரப் பிரதேச மாநில அரசு அனுமதி வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த நவ.4ம் தேதியன்று தீபாவளி பண்டிகை மற்றும் நவா.10ம் தேதி சத் பூஜையை முன்னிட்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
சபரிமலை செல்பவர்கள் கவனத்திற்கு – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
இந்த வரிசையில் தற்போது, பொதுமக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் நவம்பர் 19ம் தேதி அன்று கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது பண்டிகை காலங்களில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணக்கூடும் என்பதால் அப்பகுதிகளில் முறையான நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கனமழை எதிரொலி!
இப்போது நவ.19ம் தேதியன்று கொண்டாடப்பட இருக்கும் கார்த்திகை பூர்ணிமா பண்டிகை இந்து, சீக்கியர் உள்ளிட்ட பல்வேறு மதத்தினரால் கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும். இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் பௌர்ணமி நாள் அல்லது கார்த்திகை பதினைந்தாவது சந்திர நாளில் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த பண்டிகை திரிபுரி பூர்ணிமா என்றும் திரிபுராரி பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.