திருவாரூரில் டிச.26ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 100+ தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு!
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தனியார் வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை சி.எம்.டி.ஏ குழுமத்தில் வேலைவாய்ப்பு – ஜன.13 விண்ணப்பிக்க கடைசி நாள்!
இந்த வேலைவாய்ப்பு முகாம் திருவாரூர் மயிலாடுதுறை சாலை புதுத்தெருவில் உள்ள நியூபாரத் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வரும் டிச.26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தகுதியான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங், நர்சிங் படித்துள்ள 18 முதல் 40 வயதுக்குள் உள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA நிலுவைத் தொகை – டிசம்பர் 25ல் அறிவிப்பு?
மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். அதனை தொடர்ந்து உயர்கல்வி, சுய வேலைவாய்ப்பு மற்றும் வங்கி கடன் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் அரங்கு அமைத்து வழிகாட்ட உள்ளனர். இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அந்த பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் முகாமிற்கு வரும் போது அந்த விண்ணப்பத்துடன், கல்விச்சான்று நகல், ஆதார், சுயவிவரம் உள்ளிட்டவைகளுடன் நேரில் சென்று பயன் பெறலாம்.