மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA நிலுவைத் தொகை – டிசம்பர் 25ல் அறிவிப்பு?
நீண்ட நாட்களாக அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகையை எதிர்பார்த்து காத்திருந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று இத்தொகை கிடைக்கும் என புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
DA உயர்வு
கடந்த 2020ம் ஆண்டு முதல் 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை 31% ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த அகவிலைப்படி (DA) தொகை எப்போது கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கான DA நிவாரணம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கிடைக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? அரசு விரைவில் முக்கிய முடிவு!
அதற்கு முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவை செயலாளருடன், அமைச்சகம் சந்திப்பை நடத்தலாம் என்று தெரிகிறது. இப்போது JCM தேசிய கவுன்சில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, நிதி அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே நிலுவைத் தொகை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஊடகச் செய்திகளின்படி, 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள DA நிலுவைத் தொகையை ஒரே தடவையில் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கவுன்சில், அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.
தமிழக அரசு விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – கட்டணம் உயர்வு!
இந்நிலையில் இம்மாதம், 18 மாத DA நிலுவைத் தொகையை ஒருமுறையில் வழங்குவது தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளருடன் விவாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சம்பள கமிஷன் அறிக்கையின்படி, நாடு முழுவதும் மொத்தம் 33 லட்சம் மத்திய ஊழியர்கள் உள்ளனர். தற்போது நிலுவையில் உள்ள 18 மாத DA தொகை குறித்து பிரதமர் இறுதி முடிவு எடுத்தால், ஊழியர்களின் வங்கிக் கணக்கில் பெரும் தொகை வந்து சேரும். இதன் மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பலன் பெற உள்ளனர்.